என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, March 24, 2011

சொர்க்கம் கண்டவன்




வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?


மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போக
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?


சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....


உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

24 comments:

ப.கந்தசாமி said... Add Reply

உள்ளத்தை உருக்கும் கவிதை. பாராட்டுகள்.

உணவு உலகம் said... Add Reply

//தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?//
தாய் மடியில் தலை வைத்து . . . . . . அப்பப்பப்பா அப்படியே உருகி எழுதிய வரிகள். உள்ளம் கவர்ந்தன.

இராஜராஜேஸ்வரி said... Add Reply

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?//
பழகிப் poonathu.

Chitra said... Add Reply

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போக
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!


...... sad, indeed!

Speed Master said... Add Reply

//
DrPKandaswamyPhD said...
உள்ளத்தை உருக்கும் கவிதை. பாராட்டுகள்.

நன்றி சார்

Speed Master said... Add Reply

//FOOD said...
//தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?//
தாய் மடியில் தலை வைத்து . . . . . . அப்பப்பப்பா அப்படியே உருகி எழுதிய வரிகள். உள்ளம் கவர்ந்தன.


நன்றி சார்

Speed Master said... Add Reply

//இராஜராஜேஸ்வரி said...
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?//
பழகிப் poonathu.

நீங்களுமா

Speed Master said... Add Reply

//hitra said...
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போக
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!


...... sad, indeed!

ஆமாம்

சக்தி கல்வி மையம் said... Add Reply

அருமை

சக்தி கல்வி மையம் said... Add Reply

உங்களின் வலி புரிகிறது..

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அருமை


நன்றி

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
உங்களின் வலி புரிகிறது..

இது எனக்கு மட்டும் அல்ல பலருக்கும் தான்

பாலா said... Add Reply

நான் சொர்க்கம் கண்டவன். சொந்தங்களோடு சொந்த மண்ணில் வாழ்கிறேன்.

Speed Master said... Add Reply

//பாலா said...
நான் சொர்க்கம் கண்டவன். சொந்தங்களோடு சொந்த மண்ணில் வாழ்கிறேன்.


இனிய வாழ்கை அமைந்தற்கு வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?//

என்னய்யா இப்பிடி மனசு வலிக்க வச்சிட்டீங்களே....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//இதயம் நனைத்தஇந்த வாழ்வுஇளைய தலைமுறைக்காவதுஇனி கிடைக்குமா ?//

கிடைக்க வேண்டும் இறைவா....

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
//தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?//

என்னய்யா இப்பிடி மனசு வலிக்க வச்சிட்டீங்களே....

மனதின் வலி

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//இதயம் நனைத்தஇந்த வாழ்வுஇளைய தலைமுறைக்காவதுஇனி கிடைக்குமா ?//

கிடைக்க வேண்டும் இறைவா....

ஆம்

Anonymous said... Add Reply

நெகிழ வைத்த கவிதை

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

>>சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....

அட்டகாசம்.. மனதை டச் பண்ணீட்டீங்க.. பணத்துக்காக வெளி நாடு போய் தனிமையில் அவதிப்படுபவர்கள் பாவம்..

Speed Master said... Add Reply

//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
நெகிழ வைத்த கவிதை


நன்றி

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
>>சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....

அட்டகாசம்.. மனதை டச் பண்ணீட்டீங்க.. பணத்துக்காக வெளி நாடு போய் தனிமையில் அவதிப்படுபவர்கள் பாவம்..


உண்மைதான்

Unknown said... Add Reply

கவிதையால அழ வைக்காதே நண்பா!

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
கவிதையால அழ வைக்காதே நண்பா

அவ்வளவு சோகமாவா இருக்கு!!!!!